அப்படி போடு…. மகளிர் உரிமை துறையில் தற்காலிக பணியிடங்கள்… ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil June 20, 2025 05:48 PM

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

குடும்பத்தில் மற்றும் சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை தடுக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் இயங்கி வருகின்றது. அதில் சுழற்சி முறையில் பணியாளர்-1 பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகிய விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் உதவி எண்கள் குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு போன்றவற்றிற்கான விழிப்புணர்வு வழங்கிட செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் தரவு நுழைவு பணியாளர்-1 பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கத்தக்கது.

இந்த விண்ணப்பங்களை https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.