காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் கூடுகிறது..!
Newstm Tamil June 20, 2025 08:48 PM

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வருகிற 27-ந்தேதி கூடுகிறது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீர் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி, ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.