காசாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றை ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 55,500க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து சொந்த ஊரிலே அகதிகளாக மாறினர். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் முதல் காசாவுக்குள் எந்தவிதமான உணவு மற்றும் உதவிப் பொருட்களை செல்ல விடாமல் இஸ்ரேல் தடுத்தது.
இதனால் அங்கு பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கடும் பட்டினியில் வாடுகின்றனர். கடந்த சில வாரங்களாக உதவி பொருட்களை அனுமதிக்கும் இஸ்ரேல், உணவு பெற வரும் மக்கள் கூட்டம் மீது துப்பாக்கிச் சூடு நடந்து நூற்றுக்கணக்கானோரை கடந்த வாரங்களில் கொன்றது.
அதையும் மீறி உதவிகளைப் பெரும் மக்களுக்கு வெறும் சிறிய அளவே கிடைப்பதால் மருந்து மற்றும் உணவின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவன் ஒருவர் பேசும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் காசாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லாமல் தவிக்கிறோம். ஒவ்வொரு நாளும் காசாவுக்குள் உணவுப் பொருள்கள் அடங்கிய டிரக்குகள் வருகிறது. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. நாங்கள் உணவு எதுவும் இல்லாமல் மண்ணை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவு செய்து கருணை காட்டுங்கள்.
எங்களிடம் உணவு இல்லை நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மண்ணை சாப்பிட்டு கொண்டிருக்கிறோம் என்ற வீடியோ வைரலானது. காசாவில் தற்போது ஒரு ரொட்டி தூண்டின் விலை 5.30 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.570. அந்த ஒரு ரொட்டி துண்டும் மிகவும் சிறியது. அது எங்களுக்கு போதவில்லை என்று கூறினார்.