Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசி ரூமில் இருக்கும் போது குமார் வர அவரிடம் வம்பு பேசுகிறார். கட்டிக்கிட்டு ஒருத்தியை அழைச்சிட்டு வந்தீங்களே அவ எப்படி இருக்கானு கேட்டீங்களா எனக் கேட்கிறார். இதனால் குமார் கடுப்பாகி நானா உனக்கு தாலி கட்டினேன்.
என்னைக்குமே கவனமா இருப்பேன். அன்னைக்கு ஒரு நாள் மிஸ்ஸாகி எனக்கு இப்போ பிரச்னையாகிவிட்டதாக சொல்கிறார். அரசி திரும்பி பேசிக்கொண்டே இருக்க வா வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லலாம் எனப் போக அப்போது முத்துவேல் நிற்கிறார்.
குமாரிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி அழைத்து செல்கிறார். அவர் குமாரை வீட்டு அழைச்சிட்டு வந்த பொண்ணை கொடுமைப்படுத்துறீயா எனக் கேட்க அதெல்லாம் இல்ல பெரியப்பா என குமார் சமாளிக்கிறார். நம்ம சண்டையை பொம்பளைங்க மேல காட்டாத எனச் சொல்லி செல்கிறார்.
பின்னர் சக்திவேல் என்ன இவரு திடீரென நல்லா பார்த்துக்கோ எனச் சொல்லிவிட்டு செல்கிறார் என சந்தேகமாக பேசுகிறார். பாண்டியன் வீட்டில் சரவணனுக்கு சாப்பாடு பரிமாறி தங்கமயில் கவனித்து கொண்டு இருக்கிறார். அப்போ அவர் அம்மா பிள்ளைக்காக மாறிடுவார் என்பது நினைத்துக்கொள்கிறார்.
சக்திவேல் மற்றும் முத்துவேல் தனியாக பேசிக்கொண்டே நடந்து செல்ல ராஜி குறித்து பேச்சு வருகிறது. அந்த வீட்டுல நம்ம பிள்ளையை கஷ்டப்படுத்துறாங்களா உங்க கிட்ட ராஜி எதுவும் சொன்னுச்சா எனக் கேட்கிறார். பாண்டியன் அப்போது முன் வருகிறார்.
அவரை வழிமறித்து பேசும் முத்துவேல் அந்த வீட்டில் எங்க பெண்ணை சரியா பாத்துக்கணும். உன் பிள்ளை ஒழுங்கா இருக்கணும். அவளை என் பொண்ணு இல்லனு தலைமுழுகிட்டேன் தான். ஆனா அவளுக்கு ஒன்னுனா சும்மாவே இருக்க மாட்டேன் என்கிறார்.
பின்னர் சக்திவேல் மற்றும் குமார் பேசிக்கொண்டு இருக்கும் போது நல்லா பாத்துக்கவா கல்யாணம் பண்ணிக்க சொன்னேன். யாரும் நிம்மதியாவே இருக்க கூடாது எனக் கூற குமார் அதான் அப்பா சரி என அரசிக்கு தொல்லை கொடுக்க பிளான் செய்கிறார்.
அரசியை டிரஸ் எடுக்கலாம் என கடைக்கு அழைத்து செல்ல எனக்கு என்ன டிரஸ் நல்லா இருக்கும். நான் எந்த டிரஸ போடட்டும் என அரசி கலாய்க்க குமார் கடுப்பில் அமர்ந்து இருக்கிறார்.