கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரியும் காரும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் 6 பேரும், ஆம்னி கார் ஒன்றில் அரவகுறிச்சி அருகே சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே வந்த மினி லாரி, ஆம்னி கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரும், மினி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரும் பலத்த காயம் அடைந்தனர்.
மினி லாரி பயங்கர வேகத்தில் மோதியதில், இந்த விபத்தில் காருக்குள் இருந்தவர்கள் காருக்குள்ளே இருந்து வெளியே வர இயலாதவாறு வசமாக சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை அந்த பகுதி மக்கள் பத்திரமாக மீட்டு, அனைவரையும் கரூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது