ஆங்கிலத்தில் பேசுவதை இந்திய மக்கள் அவமானமாக கருதும் நாள் வெகு தொலைவில் இல்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அதற்காக வெட்கப்படும் காலம் வரும். அந்நிய மொழியில் நமது கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றை புரிந்துகொள்ள முடியாது. நம் தாய் மொழிகளை பேசுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். உலகம் முழுவதும் காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளமாக ஆங்கிலம் வெறுக்கப்படும்” என்றார்.