தெருநாய்க்கடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் சென்னை திருவல்லிக்கேணியில் கடைக்கு சென்ற பள்ளி மாணவியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இதுகுறித்து நாயின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை குதிரத்தலி மக்கான் தெருவில் வசித்து வருபவர் தர்மன். இவர் சென்னை மாநகராட்சியின் 129வது வார்டு சுகாதார பிரிவில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவர் நடந்து முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால், மீண்டும் தேர்வுக்காக படித்து வருகிறார்.
இந்நிலையில் ஜூன் 13ம் தேதி திருவல்லிக்கேணி வெங்கடசாமி தெருவில் வசித்து வந்த 42 வயது லட்சுமி தனது வளர்ப்பு நாயை வாக்கிங் அழைத்து வந்துள்ளார். அரசு உத்தரவை மீறி நாயிக்கு வாயில் பாதுகாப்பு சாதனம் பொருத்தாமல் அழைத்து வந்திருந்தார். அப்போது சிறுமி வீட்டின் அருகே உள்ள கடைக்கு வந்த போது வளர்ப்பு நாய் திடீரென சிறுமி மீது பாய்ந்து வலது தொடை மற்றும் இடுப்பு பகுதிகளில் கடித்து குதறிவிட்டது. அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி அடித்து சிறுமியை மீட்டனர். படுகாயடடைந்த சிறுமி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை தர்மன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தனது மகளை நாய் கடித்து விட்டதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நாயின் உரிமையாளர் லட்சுமியை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது