வீட்டுமனை விற்பனை மோசடியில் அதிமுக நிர்வாகி கைது!
Dinamaalai June 21, 2025 12:48 AM

அதிமுக நிர்வாகி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வீட்டுமனை விற்பனை செய்ததில் மோசடியில்   ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அதிமுக கட்சி வட்டாரத்திலும், தொண்டர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராசிபுரம் நகர அதிமுக செயலாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் இருக்கும் நிலையில் இவர் வீட்டுமனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. அவரிடம் தவணை முறையில் பணம் செலுத்தியவர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மோசடி குறித்து அமமுக நாமக்கல் மாவட்ட செயலாளர் பழனிவேல் என்பவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.