இன்று ஜூன் 20ம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் உலக அகதிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் வாழும் அகதிகளை கௌரவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 20 ‘உலக அகதிகள் தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் உலக அகதிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்” என பதிவிட்டுள்ளார். மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்!
நமது திராவிட மாடலில் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்! போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது