nayan
nayan
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாகவும் திகழ்ந்தார். விஜய் அஜித் சூர்யா ரஜினி என அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த நயனுக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருந்து வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார். அது மட்டுமல்ல பிசினஸ் வுமனாகவும் இருந்து வருகிறார். ஏராளமான பிசினஸை கைவசம் வைத்திருக்கும் நயன் இன்னொரு பக்கம் நல்ல அம்மாவாகவும் இருந்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான நயன் ஒரு பக்கம் குடும்பம் ஒரு பக்கம் குழந்தை ஒரு பக்கம் தொழில் ஒரு பக்கம் நடிப்பு என பிசியான பெண்மணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நயன் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து பெரிய வெற்றி படமாக அமைந்த திரைப்படம் கோலமாவு கோகிலா. அந்தப் படத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்டை படத்தின் இயக்குனர் வைத்திருந்தார். நயனுக்கு ஜோடியாக யோகி பாபு என்று சொன்னதும் அனைவருக்குமே ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது .
ஏன் யோகிபாபுவுக்கே அது அதிர்ச்சியாக தான் இருந்தது. அதைப்பற்றி பல மேடைகளில் யோகி பாபுவே கூறியிருக்கிறார். என்னிடம் கேட்டது சரி முதலில் இதற்கு நயன் சம்மதித்தாரா என்று கூட தான் கேட்டதாக யோகி பாபு பல மேடைகளில் கூறியிருக்கிறார். அந்த படத்தில் ஒரு காட்சியில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை பற்றி யோகி பாபு ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
போதை பொருளை கடத்திக்கொண்டு வேனில் செல்லும் பொழுது திடீரென அந்த வேன் பிரேக் அடிக்க யாரும் எதிர்பாராத விதமாக யோகிபாபுவின் முகத்தில் நயன் அவருடைய காலை வைப்பது போன்ற ஒரு காட்சி. முதலில் அந்த காட்சியில் நடிக்கவே மாட்டேன் என நயன் கூறினாராம் .சரண்யா பொன்வண்ணனும் இந்த மாதிரி காட்சிகள் வேண்டாம் ரசிகர்கள் ஏதாவது சொல்வார்கள் என கூறி இருக்கிறார்கள் .
சும்மா காமெடிக்கு தானே இருக்கட்டும் என சொல்ல அதன் பிறகு தான் அந்தக் காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சிக்காக பல டேக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் நயன் முதல் டேக்கில் காலை தூக்கியதுதான் கடைசி டேக் ஓகே ஆகும் வரை அந்த காலை கீழே வைக்கவே இல்லையாம். ஏனெனில் ஒவ்வொரு முறையும் கீழே வைக்கும் பொழுது காலில் மண் ஒட்டும். அது யோகிபாபுவின் முகத்தில் படுமே என்ற காரணத்தினால் டேக் ஓகே ஆகும் வரை காலை தூக்கிக் கொண்டே தான் இருந்தாராம். அந்த அளவுக்கு ஒரு டெடிகேஷனான நடிகை நயன் என யோகி பாபு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.