பொதுவாக நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது இயல்பானது. ஆனால் ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு கிராமம் முழுவதுமாக நரிகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளதை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்கின்றனர்.
ஜப்பானில் உள்ள நரிகள் கிராமம்ஜப்பானின் மியாகி மாகாணத்தில் உள்ள ஷிரோஷி நகரத்தில் (Shiroishi) ஜோவா மலைக்கு அருகில் அமைந்துள்ள இந்த கிராமம், “Fox Village” எனப்படும். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட நரிகள் வாழ்கின்றன. முழுக் கிராமமும் நரிகள் சுதந்திரமாக இயங்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த கிராமம் ஒரு விலங்கியல் பூங்காவை போன்ற தோற்றத்தைக் கொண்டது. நரிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு மக்களிடம் விளையாடும் அழகான காட்சிகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன. நரிகள் அடைத்து வைக்கப்படுவதில்லை, ஆனால் பாதுகாப்பிற்காக நெருக்கமாக செல்ல வேண்டாம் என விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பேரழிவை ஏற்படுத்திய 1941ம் ஆண்டைப் போலவே, 2025ம் ஆண்டும் அதே துயரங்கள்! இரண்டு ஆண்டும் ஒரே காலண்டரா? செவ்வாயின் தீய தாக்கம்..பெரும் அதிர்ச்சி!
உணவு கொடுக்கும் விதிமுறைகள்நரிகளுக்கு உணவு கொடுக்க அனுமதி உள்ளது, ஆனால் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் உணவு கொடுத்தல் தடையாகும்.
காலணி அணிவது தடைமுன்பொரு பயணியின் காலணியில் நரி கடித்து ஒரு துண்டை விழுங்கியதால் அது இறந்தது. இதையடுத்து நரிகள் கிராமத்தில் காலணி அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு செல்வோர் அவசியம் காலணியை எடுத்து வைக்க வேண்டும்.
இந்த நரிகள் கிராமத்தை ஆண்டு முழுவதும் பார்க்கலாம். குறிப்பாக குளிர்காலத்தில் பனியால் மூடிய மலைப்பகுதி அற்புதமாக இருக்கும். இது ஒரு அமைதியான, இயற்கை காட்சிகளுடன் கூடிய இடமாக இருக்கின்றது.
மக்கள் நம்பிக்கைஇந்த கிராமத்தில் வாழும் மக்களுக்கு நரி என்பது ஒரு பெண் கடவுளின் தூதுவராகும் என்பதிலான நம்பிக்கை இருக்கிறது. அதனால் இங்கு நரிகளை வழிபடும் வழக்கமும் உள்ளது. சில கோயில்களில் கூட நரிகள் சிலைகளை காணலாம். நரிகள் ஏற்படுத்தும் சிறிய தொந்தரவும் ஒரு வரமாக பார்க்கப்படுகிறது.
குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற இடம்ஜப்பான் செல்லும் உங்கள் பயணத்தில் இந்த நரி கிராமத்தை இணைத்துக் கொண்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழும் அனுபவமாக இது அமையும்.
ஜப்பானில் உள்ள நரிகளுக்கான கிராமம், ஒரு தனித்துவமான சுற்றுலா இடமாகவும், விலங்குகளுடன் வாழும் சமநிலை வாழ்க்கையின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ரியல் ஹீரோ! சொந்த ஊருக்காக தனி ஆளாக இருந்து என்ன செய்துள்ளார் பாருங்க! 27 ஆண்டுகள் உழைப்புக்கு பின் கிடைத்த வெற்றி!