சட்டவிரோத பண பரிமாற்ற சட்ட வழக்கில் நேரில் ஆஜாராக அதிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டால் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011 இடையையான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது. செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை என்பது வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கின் கீழ் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கத்துறை இதற்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது நீதிபதி, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு என்று உத்தரவிட்டார்.