அமெரிக்காவைச் சேர்ந்த பெண் மருத்துவர், விமானத்தில் பயணித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளார்.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின் படி, நியூயார்க்கில் குழந்தை நல மருத்துவராக டாக்டர் டோரீன் பெனாரி பணியாற்றி வருகிறார்.
பிராங்பேர்ட்டிலிருந்து நியூயார்க்கிற்கு வணிக வகுப்பில் பயணம் செய்த இந்த மருத்துவர், தனக்கு உணவு ஒவ்வாமை இருப்பது குறித்து விமான பணியாளர்களிடம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.
இருந்தபோதிலும் விமான ஊழியர்கள், அவருக்கு இரால் கொண்ட உணவை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் நடுவானிலேயே அவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.
இதனால் அந்த மருத்துவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது அந்த மருத்துவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்படி, SIA விமானம் SQ026 பயணித்தபோது, டாக்டர் டோரீன் பெனாரி, ஒரு கேபின் குழு உறுப்பினரிடம் தனக்கு ஒவ்வாமை இருப்பதாகக் கூறினார்.
இருப்பினும், அவர்கள் இறால் அடங்கிய உணவை பரிமாறினர். ஒரு பகுதி சாப்பிட்டவுடன், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. கேபின் குழு உறுப்பினரிடம் விசாரித்தபோது, அவர்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் பறக்கும் போது மொபைலை Airplane mode-ல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்!