குணப்படுத்த முடியாத நோயாளிகளைக் கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்!
Dinamaalai June 22, 2025 03:48 AM

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் இந்த  சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் 314 எம்.பி.க்களும், எதிராக 291 பேரும் வாக்களித்தனர்.

இதனையடுத்து  அந்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு அந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ, சட்டமாக்கலை தாமதப்படுத்தவோ மட்டும் தான் முடியும்.

பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றிய மசோதாவை மேலவையால் எப்போதும் நிராகரிக்க முடியாது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.