சிறுநீரக கற்கள் உருவாகாமலிருக்க எப்போது தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
Top Tamil News June 22, 2025 08:48 AM

பொதுவாக  தண்ணீர்  வெறும் வயிற்றில் குடிப்பதால் சிறு நீர் கற்கள் வராமல் காக்கும் .மேலும் வயிற்றில் செரிமான கோளாறு வராமல் இருந்து ,உடலை நன்றாக பசியெடுக்க வைக்கும் .மேலும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் 

1. அனைவரும் காலையில் எழுந்தவுடனே தண்ணீர் அருந்த வேண்டும், குறிப்பாக கோடை காலத்தில் கண்டிப்பாக முதல் வேலையாக தண்ணீர் அருந்த வேண்டும்.
2.காலையில் முதலில் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் குறைகிறது. காலையில் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை அமைதிப்படுத்தவும், கற்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவுகிறது.
3.உங்கள் சருமம் டல்லாக, அதாவது மிக சோர்வாக இருந்தால், எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது தண்ணீர் குடிக்க வேண்டியதுதான். ஏனெனில் இது சருமத்தை பளபளக்க வைக்கிறது
4.காலையில் தண்ணீர் குடிப்பதால், வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறி,  நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. 
5.இந்த பழக்கம்  நோய்வாய்ப்படும் பிரச்சனையிலிருந்தும் ஒருவரைக் காப்பாற்றும். 
6.காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், அது வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரித்து, எடையைக் குறைக்க உதவுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.