100 குழந்தைகளுக்கு சொத்தை எழுதி வைத்த டெலிகிராம் நிறுவனர்..!
Top Tamil News June 22, 2025 01:48 PM

டெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரி பவெல் துரோவ், தனது $17 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை, 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பிரித்து வழங்க திட்டமிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் விந்து தானம் மூலம் பிறந்தவர்கள். 40 வயதான துரோவ், தனக்கு குறைந்தது 106 குழந்தைகள் உயிரியல் ரீதியாக இருப்பதாக பிரெஞ்சு பத்திரிகை Le Point-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"அவர்கள் அனைவரும் என் குழந்தைகள், அனைவருக்கும் ஒரே உரிமைகள் இருக்கும்!" என்று துரோவ் உறுதிப்படுத்தினார். ஒரு குழந்தைக்கு சுமார் $131 மில்லியன் முதல் $161 மில்லியன் வரை கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும், குழந்தைகள் இந்த சொத்தை 2055-க்கு பிறகுதான் பெற முடியும். அவர்கள் சுதந்திரமாக வளர வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று அவர் விளக்கினார். "அவர்கள் சுயமாக வளர்ந்து கொள்ள வேண்டும், தங்களை நம்ப கற்றுக்கொள்ள வேண்டும், இந்த பணத்தை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது" என்பதே துரோவின் விருப்பம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.