“அம்மா… என் உயிர் பிழைக்கணும்!” – அடைத்து அடித்து, மாடியிலிருந்து தள்ளிய கொடூர கணவர் குடும்பம்..!! கொந்தளிக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!
SeithiSolai Tamil June 22, 2025 06:48 PM

உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலௌன் மாவட்டம் ஒரை பகுதியில் அதிர்ச்சியூட்டும் குடும்ப வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளது. ஜூன் 19ம் தேதி இரவு, தனது இரண்டாவது மனைவியான 35 வயதான ஆம்னாவை, கணவர் ஆரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து தள்ளி விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் வீட்டு வெளியேபொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆம்னாவின் தந்தையான கமர் சித்திகி அளித்த புகாரின் பேரில், தனது மகள் ஆரிபை 4 ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணமாக மணந்துள்ளதாகவும், முதல் திருமணத்தில் பிறந்த மூன்று குழந்தைகளில் இரு குழந்தைகளை திருமணத்துக்குப் பிறகு வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவைத்ததாகவும் கூறினார்.

மேலும், ஆம்னாவை வீட்டில் வைக்க ரூ.1 கோடி வரதட்சணை கொண்டுவர வேண்டும் எனக் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 19 மாலை, அவரது பேரன் கொடுத்த தகவலின்பேரில் கமர் சித்திகி சம்பவ இடத்துக்கு வந்து, ஆம்னாவை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

“>

ஆம்னா கூறியதின்படி, அவரது கணவர் ஆரிப், சகோதரர் இம்ரான், சகோதரி ஷெஹ்நாஸ், அரிபின் முதல் திருமணத்திலிருந்த மகள் நிதா மற்றும் அவரது தந்தை ரஹ்மத்துல்லா ஆகியோர் ஒன்றுசேர்ந்து தன்னை கடுமையாக தாக்கியதாகவும் , ஓடிப் பிழைக்க முயன்ற போது, ஷெஹ்னாஸ் மற்றும் நிதா அவரை அறையில் பூட்டிவைத்து தாக்கியதுடன், பின்னர் மாடியில் ஓடியபோது அவர்கள் கீழே தள்ளி தள்ளிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

வீடியோவில், ஒரு பெண் மாடியிலிருந்து கீழே விழுவதும், பைக்கின் மேல் பட்டு விழுவதும் காணப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.