திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. நேற்று விடுமுறை தினமாதலால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். இந்த கூட்டம் சிலாத்தோரணம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டது.
இலவச தரிசனத்துக்கு வந்திருந்தவர்கள் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை 45000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் 76181 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் 33874 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கை மட்டும் ரூ.4 கோடியே 88 லட்சம் கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது