கோவை மாவட்டம் வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதியில் வசித்து வரும் தம்பதி மனோஜ் மோனிகா. இவர்களது 4 வயது குழந்தை ரோஷினி நின்றுகொண்டிருந்தாள். அப்போது அங்குவந்த சிறுத்தை ரோஷினியை கவ்வி சென்றுவிட்டதாக தெரிகிறது.இதில் மனோஜ்- மோனிகா இருவரும் புலம்பெயர் தொழிலாளர்கள்.
குழந்தையை சிறுத்தை இழுத்து சென்ற தகவல் அறிந்ததும் தாய் தந்தை இருவரும் துடித்தனர். மோப்பநாய் மற்றும் ட்ரோன் உதவியுடன் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை முதல் தேடி வந்த நிலையில், வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தாய் கண் முன்னே சிறுத்தை 4 வயது குழந்தையை தூக்கி சென்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது