சார்ஜ் போடணும் மேடம்…! “வீட்டிற்குள் வந்து அத்துமீறிய டெலிவரி பாய்….” அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
SeithiSolai Tamil June 21, 2025 11:48 PM

செப்டோ என்னும் நிறுவனம் மூலம் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது. சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்வதற்காக கோபிநாத் என்ற நபர் சென்றுள்ளார்.

அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த கோபிநாத் செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என அனுமதி கேட்டுள்ளார். உடனே அந்த பெண்ணும் கோபிநாத்தை வீட்டிற்குள் அனுமதித்தார்.

சிறிது நேரம் கழித்து கோபிநாத் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் கோபிநாத்தை பிடித்து சரமாரியாக அடித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் கோபிநாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் ஆன்லைன் டெலிவரி நிறுவனத்திலும் புகார் அளித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.