பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுய் மாவட்டத்தின் சிகார்ஹியா கிராமத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது பீகார் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அங்குள்ள 2021-ல் திருமணம் செய்துகொண்ட ஆயுஷி குமாரி என்ற பெண், தனது முதல் கணவர் விஷால் துபேயை விட்டுவிட்டு, தனது மருமகனான சச்சின் துபேயை கோவிலில் திருமணம் செய்துள்ளார். இது மாமியார் – மருமகன் உறவுக்கே எதிரான காதலாக சமூகத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
விஷால் மற்றும் ஆயுஷிக்கு ஒரு நான்கு வயது மகளும் உள்ளார். திருமண வாழ்க்கையில் சில வருடங்கள் கழிந்த பிறகு, ஆயுஷியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மருமகனான சச்சினுடன் அதிகரிக்கத் தொடங்கியது. இருவரும் சமூக ஊடகங்களில் அறிமுகமானதிலிருந்து அடிக்கடி பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறி, ஜூன் 15ஆம் தேதி, ஆயுஷி தனது கணவரும் மகளையும் விட்டுவிட்டு சச்சினுடன் வீட்டைவிட்டு ஓடியுள்ளார்.
அந்த காதல் விவகாரம் வெளிவந்ததும், விஷால் துபே டவுன் காவல் நிலையத்தில் மனைவி காணாமல் போனதாக புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்திய போது, இருவரும் கிராம மக்கள் முன்னிலையில் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆயுஷியின் முன்னாள் கணவரும், சச்சினின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, சச்சின், “இந்தக் காதலுக்கு இப்போது ஒரு பெயர் கிடைத்துள்ளது. ஆயுஷியை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்” என்றார்.
ஆயுஷி, தனது முன்னாள் கணவர் விஷாலிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக கூறினார். மேலும், “இனிமேல் எனக்கு அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக விஷால் கூறியதாவது, “அவளது குற்றச்சாட்டுகள் பொய்யானவை. என் தாய் மற்றும் மகளிடம் தவறாக நடந்துகொண்டாள். அவளுடன் வாழ விரும்பவில்லை என்பதால், இனிமேல் அவளை கவனிக்கும் எனக்கு பொறுப்பு இல்லை. இப்போது அந்த பொறுப்பு சச்சினின் கையில் உள்ளது” எனக் கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.