காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் போல்தேவ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவனை தன் பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதாவது அந்த பகுதியில் பீகாரை சேர்ந்த ஒரு தம்பதி வசித்து வரும் நிலையில் அவர்களுக்கு 5 வயதில் ஆரவ் குமார் என்ற மகன் இருந்துள்ளார்.
இந்த சிறுவனை வாலிபர் தன் பாலின உறவுக்கு கட்டாயப்படுத்திய நிலையில் அவன் எதிர்ப்பு தெரிவித்ததால் கோபத்தில் கல்லால் அடித்தே கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவனின் சடலம் கடந்த 15ஆம் தேதி ஒரு முட்புதிரிலிருந்து மீட்கப்பட்டது.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் சிறுவனுடன் நடந்து சென்றது சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததன் மூலம் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்ய மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. மேலும் அந்த வாலிபரை தற்போது போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.