ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்... உயரப்போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை? !
Dinamaalai June 23, 2025 01:48 PM


 
ஈரானின் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே ஏற்கனவே போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது. அத்துடன் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து  வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழ்நிலையை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இது உலக அளவில் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தாக்குதல் அதிகரித்துள்ளதால் மேலும் பதட்டமான சூழ்நிலை  நிலவி வருகிறது. கடந்த வாரம் முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளன. இதன் விளைவாக மூன்று முக்கியமான ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி உள்ளது.
 
இதனால் உலகளாவிய சந்தைகளில் எரிசக்தி துறையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக  கச்சா எண்ணெய் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன. கடந்த வாரத்தில், கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே பீப்பாய்க்கு சுமார் $79 ஆக உயர்ந்துள்ளது, இது முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையே கவலையை அதிகரிக்க செய்துள்ளது. சர்வதேச எண்ணெய் விலைகளுக்கான முக்கிய அளவுகோலான ப்ரெண்ட் ஃபியூச்சர்ஸ், ஏறத்தாழ 18 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல், இதில் அமெரிக்கா தலையீடு ஆகியவை மத்திய கிழக்கில் இருந்து வரும் எண்ணெய் வரத்தை சீர்குலைக்கும் என முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் கணிசமான பகுதி கடந்து செல்லும் குறுகிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணை மிகவும் முக்கியமான கவலைகளில் ஒன்றாகும். இந்த முக்கியமான பாதையில் ஏதேனும் தடங்கல் அல்லது அடைப்பு ஏற்பட்டால், அது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை கடுமையாக பாதித்துவிடும்.  ஹார்முஸ் நீரிணை பாதை தடுக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $120 வரை உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  தற்போது கச்சா எண்ணெய் விலை $77 ஆக உள்ளது. இத்தகைய மாற்றங்கள் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். 


தங்கள் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியா இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயை பெரிதும் சார்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தால் உள்நாட்டில் எரிபொருள் செலவுகளை அதிகரிக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். இது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக விலைக்கு வழிவகுக்கும். இதனால் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டு பணவீக்கத்தை ஏற்படுத்தும். போர் நடக்கும் பகுதிகளில் இயங்கும் கப்பல் நிறுவனங்கள் தங்கள் வழிகளை மாற்ற தொடங்கியுள்ளன. இதன் விளைவாக, மத்திய கிழக்கில் டேங்கர் கட்டணங்கள் இரட்டிப்பாகியுள்ளன.  இது உலகளாவிய சந்தைகளுக்கு கச்சா எண்ணெயை வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.  
ஜேபி மோர்கன் மற்றும் சிட்டி வங்கி போன்ற நிதி நிறுவனங்கள்  பதட்டங்கள் நீடித்தால் மற்றும் ஹார்முஸ் நீரிணை சீர்குலைந்தால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகமாக ஏறி, உலகளவில் பொருளாதார உறுதியற்ற தன்மையை அதிகப்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த நெருக்கடியின் தாக்கங்கள் எரிசக்தி சந்தைகளுக்கு அப்பால் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.