அக்னி சிறகு! ஏழு கண்டம் ஏழு உயரமான மலை ஏறி சாதனை...! - முத்தமிழ்செல்வியை பாராட்டிய துணை முதலமைச்சர்
Seithipunal Tamil June 23, 2025 01:48 PM

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,"ஏழு கண்டங்களிலுள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் சகோதரி 'முத்தமிழ்ச்செல்வி'. உயிரை பணையம் வைத்து இச்சாதனையை சாத்தியமாக்கி இருக்கும் அவருக்கு என் பாராட்டுகள்.

ஒவ்வொரு மலையேற்றத்திற்கு முன்பும் நம்மை சந்தித்து அவரது அடுத்தடுத்த மலையேற்றம் குறித்த தகவல்களையும் அதிலுள்ள சவால்களையும் பகிர்ந்து கொள்வார்.

அவருடைய வெற்றிப்பயணத்திற்கு @SportsTN_ துணை நின்று வருகிறது என்பதில் பெருமை கொள்கிறோம்.தங்கை முத்தமிழ்ச்செல்வி இன்னும் பல உயரங்களை தொட அவரைப்போல பலரை உருவாக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்"எனத் தெரிவித்துள்ளார்.

இது தற்போது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.