மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக கட்சியின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் கடவுளை எதிர்த்ததை விமர்சித்து இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை அங்கிருந்த அதிமுக தலைவர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலரும் வேடிக்கை பார்த்ததாக தற்போது திமுக அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக ஐடி விங் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட போஸ்டரையும் அதிமுக அமைச்சர்கள் அங்கிருந்ததையும் விமர்சித்துள்ளனர். அதாவது முருக பக்தர்கள் மாநாட்டின் போது முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா என்ற வாசகம் இருந்தது. இந்த வாசகத்தை குறிப்பிட்ட அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி பேசியதையும் இணைத்துள்ளனர். அதாவது மதுரையில் நடைபெறும் முருகன் பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துக்கள்.
அவரவர் தெய்வங்களை வழிபடுவது அவரவர் ஜனநாயகத்தின் உரிமை. ஆங்கிலம் குறித்த அமித்ஷா பேசியது அவரது கருத்து. தாய்மொழியை ஆதரித்து அவ்வாறாக பேசினார் என்ற கருத்தை போட்டுள்ளனர். இதனை விமர்சித்த திமுக ஐடி விங் திராவிடத்தை அழிக்க ஓடிவா என்று போட்டுள்ளனர். இதைப்பற்றி வாய் திறக்காமல் வாழ்த்து சொல்லிட்டு போயிருக்கீங்க. அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு. மேலும் தினம் அச்சப்படும் அடிமை சாமிக்கு எதற்காக அரசியல் என்று பதிவிட்டுள்ளனர்.
அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு?
தினம் அச்சப்படும் அடிமைசாமிக்கு அரசியல் எதற்கு??#ADMKFails pic.twitter.com/0wJjKPM0sv
— DMK IT WING (@DMKITwing)