மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உட்பட அனைவரும் ஒன்றாக கந்த சஷ்டி கவசம்பாடி சாதனை படைத்தனர்.
மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இதை முன்னிட்டு அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு, பல்வேறு வழிபாடுகள் அங்கு நடந்து வந்தன. நாள்தோறும் ஏராளமானவர்கள் தரிசித்தார்கள்.
மாநாட்டு மேடை திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்தும், அதில் முருகப்பெருமான் படத்துடன், அறுபடை வீடுகளின் கோபுரங்களும் இடம்பெறுவது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது.
நேற்று காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு திரண்டு வர தொடங்கினர். பலர் காவி உடைகளுடன், மேள,தாளங்களுடன் ஆடிப்பாடியும் வந்தனர். குழுவாக வந்தவர்கள், கந்த சஷ்டி கவசத்தை பாடியபடி வந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் மாநாட்டு மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராேஜந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., சன்னியாசிகள், முருகனடியார்கள், சிவ பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
மாலை 5.30 மணி அளவில் பச்சை வேட்டி, துண்டுடன் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மேடைக்கு வந்தார். அவர் பேசியதாவது: மதுரைக்கு என்னை வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தெடுத்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும், முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் படை வீடும், 6-வது படை வீடும் மதுரையில்தான் உள்ளன. மதுரை என்பது மீனாட்சி அம்மன் பட்டணம். மீனாட்சி அம்மன் பார்வதியின் அம்சம்.
எனவே முருகனின் தாயாரும், மதுரையில்தான் உள்ளார். முருகப்பெருமானின் தந்தையான சிவபெருமான் முதல் தமிழ் சங்கத்துக்கு தலைமை ஏற்று மதுரையில்தான் இருந்தார். தாயும், தந்தையும், மகனும் இந்த மதுரையில்தான் இருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த மதுரை மக்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த புண்ணியத்தின் பலனாகவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இங்கு அவதரித்தார். அவர் தென் தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர் ஆவார். அவர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார். முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அருகே மயில் சிலையும் வைக்கப்பட்டு உள்ளது. தேவர் உருவில் முருகன் மனிதராக வாழ்ந்தார். எனவே தேவரை பணிந்து வணங்குகிறேன்.
இப்போது நாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகிறோம், தரிசனம் செய்கிறோம், குங்குமம் பெறுகிறோம். ஆனால் இந்த தலைமுறைக்கு தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்லப் போகிறேன். அதாவது ஒரு காலத்தில் மதுரை இருண்டு கிடந்தது. நமக்கு ஒளி தரும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் இருள் சூழ்ந்திருந்தது. நமக்கு குங்குமம் கொடுக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில், குங்குமம் கொடுக்க ஆள் இல்லை.
60 வருடங்களாக அங்கு விளக்குகள் இல்லை.கோவில் மூடப்பட்டிருந்தது. அது மதுரையின் இருண்ட காலம். அதன்பின்னர் 14-ம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் மீண்டும் ஒளி பிறந்தது. அந்த ஒளி விளக்கை ஏற்றி வைத்தார், விஜயநகர இளவரசர் குமார கம்பன். நமது நாட்டில் நம்பிக்கைக்கு அழிவில்லை என்பதும், அதனை யாராலும் அழிக்க முடியாது என்பதும் நமக்கு தெரிந்தது. நமது கலாசாரம் மிகவும் ஆழமானது. நம்மை அசைக்க யாராலும் முடியாது.
கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக இருந்தது. இன்றும் அப்படியே இருக்கிறது. இனியும் அப்படியே இருக்கும். இதுதான் இந்த தெய்வீக பூமியின் பலன். முருகன் வடிவத்தில் நமது அறம் தொடர்ந்து வளர்கிறது. நாம் எல்லோரும் இங்கு முருக பெருமானுக்காக வந்திருக்கிறோம். அநீதியை அழித்ததால், அவர் புரட்சி தலைவர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... வீர வேல் முருகனுக்கு அரோகரா...
ஒரு கட்சி தலைவர் கேட்கிறார். முருகன் மாநாட்டை ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள். உத்தரபிரசேதம், குஜராத்தில் நடத்த வேண்டியது தானே எனக்கேட்டு பிரிவினையை ஏற்படுத்தப்பார்க்கிறார். இதுபோல், பலரும் கேள்வி கேட்கிறார்கள். இன்று முருகனை பார்த்து கேட்பார்கள், நாளை சிவபெருமான், அம்மனை பார்த்து கேட்கலாம். இந்த சிந்தனை மிக மிக ஆபத்தானது. இந்த சிந்தனை நீண்ட கால…
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது