உச்சகட்டத்தை எட்டும் மோதல்….! பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் போஸ்டர் கிழிப்பு…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!
SeithiSolai Tamil June 23, 2025 06:48 PM

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உச்சகட்ட மோதலானது நிறைவி வருகிறது. கடந்த ஆறு மாதமாக இந்த மோதல் போக்கானது நீடித்து வந்த நிலையில் இரு தலைவர்களுமே வந்து தனித்தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பொதுக்குழு கூட்டம் என நடத்தி வருகிறார்கள்.

அதேபோல அன்புமணி ராமதாஸ் உடைய ஆதரவாளர்களையும் பாமக நிறுவனர் ராமதாஸ் முற்றிலுமாக நீக்கிவிட்டு, கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்களை நீக்கி புதிதாக நியமனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இருக்கும் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டின் மதில் சுவரில் வருங்கால தமிழகமே என போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. தந்தையும் மகனும் சேர்ந்து இருக்கக்கூடிய அந்த போஸ்டர் தற்போது கிழிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே உச்சகட்ட மோதல் நிலவி வரும் நிலையில் போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவம் தொண்டர்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.