ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான மற்றும் முன்னணி நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா.
அதைத் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து நேஷனல் கிரஷ் என்ற பெயரை பெற்றார் ராஷ்மிகா மந்தனா. 2021 ஆம் ஆண்டு சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் புஷ்பா திரைப்படத்தில் நடித்து தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்றார் ராஷ்மிகா மந்தனா. பின்னர் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்தார். அடுத்து ஹிந்தி திரை உலகில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
தற்போது தனுஷுடன் இணைந்து இவர் நடித்த குபேரா திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால், குபேரா படம் முழுமை அடைந்தவுடன் நான் பார்த்த உடனேயே தனுஷ் சாருக்கு “O My God” என்று தான் மெசேஜ் பண்ணேன். அடுத்ததாக “You are such an Fantasctic Performer” என்றும் மெசேஜ் பண்ணினேன். இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. நாகார்ஜுனா சார் மற்றும் எல்லோருடனும் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம் என்று கூறியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.