தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தற்போது வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார்.
2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். ஆரம்பத்தில் இவரது தோற்றத்திற்காக மிகவும் கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் அதையும் தாண்டி தற்போது பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
இயக்குனராக தற்போது புது அவதாரம் எடுத்துள்ள தனுஷ் சமீபத்தில் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அது நூறு கோடி வசூலை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் இது எதிர்பார்த்த அளவு போகவில்லை. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை படம் வெளிவர இருக்கிறது. தற்போது தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், மக்களுக்கு உணர்ச்சிபூர்வமான படங்கள் பிடித்து விட்டது அதை குபேரா படம் உணர்த்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஒரு சாதாரணமான கதைக்களம் கொண்ட படம் மக்களை தியேட்டருக்கு இழுத்தது. இது போன்ற படங்களை மக்கள் விரும்பிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்று கூறியிருக்கிறார் தனுஷ்.