வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... முதலை ஆற்றுக்குள் இழுத்து சென்று பள்ளி மாணவன் பலி !
Dinamaalai June 24, 2025 01:48 AM

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் சனௌலி கிராமத்தில் காக்ரா ஆற்றில் சிறுவன் ஒருவன் எருமையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். இவர் அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். எருமையை குளிப்பாட்டிய அந்த சமயத்தில் சிறுவனை முதலை ஒன்று தாக்கி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இதில், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிறுவன் ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென நீரிலிருந்து முதலை ஒன்று வெளியில் வந்து, சிறுவனின் கால்களை தாடையால் பிடித்தது. அதன் பின்னர் கழுத்தையும் கடித்துக்கொண்டு, சிறுவனை ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது. அருகில் இருந்தவர்கள் கத்தியும் கூச்சலிட்டும், சிறுவனை மீட்க முடியவில்லை.

இச்சம்பவம் குறித்த பயங்கர வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், முதலை சிறுவனை இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறுவனின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.