பெற்றோர்களே உஷார்... ரீல்ஸ் மோகத்தால் வீட்டை விட்டு ஓடிய பள்ளி மாணவிகள்!
Dinamaalai June 24, 2025 01:48 AM

பீகார் மாநிலத்தில் ஔரங்காபாத் மாவட்டத்தில், மே 16ம் தேதி ஒரே நாளில் 3 சிறுமிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 14, 13, 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகள் வங்கியில் கணக்கு தொடங்கச் செல்கிறேன் எனக் கூறி வீட்டை விட்டு புறப்பட்டு, வீடு திரும்பவில்லை. காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதும், உடனே விசாரணை தொடங்கப்பட்டது.

3 பேரும் ஒரே நேரத்தில் காணாமல் போனதால், கிராம மக்கள் குழந்தைகள் கடத்தல், விற்பனை என பல்வேறு விதங்களில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த சிறுமிகள் காணாமல் போன ஒரு மாதத்திற்குப் பிறகு, பாட்னாவின் மிதாபூர் பகுதியில் இருந்த ஒரு வாடகை வீட்டிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மூவரும் பள்ளி தோழிகள் என்பதும், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ்கள் உருவாக்கும் ஆர்வத்தால் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாகவும் கூறினர். 

சிறுமிகள், பாட்னாவில் தனியாக வசித்து வந்த மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து நடனம், நடிப்பு பயிற்சி பெற விரும்பியதாக தெரிகிறது. கூகுளில் ஒரு இசை ஸ்டுடியோவை தேடி அந்த நகரத்திற்கு சென்றுள்ளனர். ஒரு ஸ்டூடியோ ஆபரேட்டரின் அறிவுரையின்படி பயிற்சி எடுத்துவந்தனர். சமூக வலைதளங்களில் வைரலான ஒரு ரீலில் பைக்குடன் இருந்த சிறுமிகளை அடையாளம் கண்டுபிடித்ததோடு, அந்த பைக்கின் பதிவுகள் வழியாக உறுதியான தகவல்களைக் கண்டறிந்து மீட்பு செயலை மேற்கொண்டனர்.

ஜூன் 20ம் தேதி, மூவரும் பாதுகாப்புடன் ஔரங்காபாத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஜூன் 21ம் தேதி மருத்துவ பரிசோதனைக்குப் பின், அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகள் எந்த அளவிற்கு பாதிக்கப்படலாம் என்பதற்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாகவும், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.