“என்ன சார்… இதெல்லாம்…” சீருடையில் இருக்கும் போதே நைசாக பையை நகட்டிய போலீஸ்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
SeithiSolai Tamil June 24, 2025 04:48 AM

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில் காவல்துறையின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஹாபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகத் சிங் மார்க்கெட்டில் பணியாற்றி வந்த துணை காவல் ஆய்வாளர் சுமித், சீருடையில் இருக்கும் போதே கடையில் வைக்கப்பட்டிருந்த பைகளை திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாக வைரலாகியுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய மேல் அதிகாரிகள், குற்றம் உறுதியானதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இடைநீக்கம் செய்துள்ளனர். இந்த வீடியோவில், இன்ஸ்பெக்டர் சுமித், கடையில் வைக்கப்பட்டிருந்த 4 பைகளை எடுத்து அமைதியாக அந்த இடத்தை விட்டு சென்றதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

சம்பவத்தையடுத்து கடைக்காரர் சாமான்களை சரிபார்க்கும் போது சில பொருட்கள் காணவில்லை என்பதை உணர்ந்தார். உடனே சிசிடிவி கேமராவின் காட்சிகளை சோதனையிட்டதில், சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, வியாபாரிகள் அனைவரும் இணைந்து மீரட்டின் எஸ்பியை சந்தித்து புகார் அளித்தனர்.

வீடியோ ஆதாரத்தைக் கருத்தில் கொண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்தை இடைநீக்கம் செய்ததோடு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. தற்போது இந்த வழக்கை, நகர காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் விக்ரம் சிங் விசாரணை செய்து வருகிறார். போலீசாரே இவ்வாறு சட்டத்தை மீறும் செயலில் ஈடுபடுவதை பொதுமக்கள் கடுமையாக கண்டிக்கின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.