அதிர்ச்சி சிசிடிவி... மழைக்காக ஒதுங்கிய இளம்பெண்கள்... நேருக்கு நேராக மோதிய பேருந்து!
Dinamaalai June 24, 2025 04:48 AM

கேரள மாநிலம் திருச்சூரில் கனமழை பெய்து கொண்டிருந்த போது பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெண்கள் மீது வேகமாக வந்த தனியார் பேருந்து  மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 3  பெண்கள் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதில், வீதியில் மழையில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது தனியார் பேருந்து  திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக  மோதுகிறது. அருகில் இருந்த ஒரு காவலர் அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்கும் நொடியில்  பொதுமக்கள் அலறி ஓடிக்கொண்டிருக்கும் காட்சியும் பதிவாகியுள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்தினை அடுத்து பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து பேருந்தை  பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சூரில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.