ஆர்ப்பரிக்கும் நீர்... ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிப்பு!
Dinamaalai June 26, 2025 01:48 PM

தண்ணீர் ஆர்ப்பரித்து வரும் நிலையில், ஒகேனக்கல் அருவிகளில் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களாக கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக கபினி அணைக்கு 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாக 25,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அருவிகளில் பரிசல்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.