டீன்-ஏஜ் சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து பலாத்காரம்... 8ம் வகுப்பு மாணவர்கள் அட்டூழியம்!
Dinamaalai June 30, 2025 03:48 AM

நாடு முழுவதும் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் பீகாரில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஏற்பட்ட பழக்கத்தில் டீன்-ஏஜ் சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து சென்று, 8ம் வகுப்பு மாணவர்கள் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து அந்த சிறுமியிடம் கொத்வாலி பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறியுள்ளனர்.

பீகாரின் பாட்னா நகரில், வசித்து வரும் டீன்-ஏஜ் சிறுமி இன்ஸ்டாகிராம் வழியே மாணவர் ஒருவருடன் நட்பு ஏற்படுத்தி கொண்டார். அவருடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். இந்த மாணவரின் மூலம் 3 மாணவர்கள் சிறுமிக்கு அறிமுகம் ஆனார்கள்.

இந்த மாணவர்கள் அனைவரும் 8 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வருபவர்கள் ஆவர். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களில் ஒருவரின் வீட்டுக்கு அந்த சிறுமி சென்றுள்ளார். அப்போது அவருடன் நெருங்கி பழகியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் 3 மாணவர்கள் சேர்ந்து அந்த சிறுமியிடம் கொத்வாலி பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வரும்படி கூறியுள்ளனர். சிறுமியும் அவர்களுடைய பேச்சை நம்பி ஓட்டலுக்கு சென்றார்.

அப்போது, அந்த 3 மாணவர்களும் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததும், அத்துமீறிய அவர்கள் சிறுமியை கும்பல் பலாத்காரம் செய்தனர்.

இதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்த அந்த சிறுமி குடும்பத்தினரிடம் நடந்த விசயங்களை கூறி அழுதுள்ளார். இதன்பின்பு, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி 4 சிறுவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.