இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 29ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்று தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் மார்ச் 29ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 11 செ.மீ., சோலையாறில் 10 செ.மீ., சின்கோனாவில் 9 செ.மீ., வால்பாறையில் 8 செ.மீ., கோவை மாவட்டம் ‘உபாசி’, கடலூர் மாவட்டம் லால்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது