குட் நியூஸ்... அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு!
Dinamaalai June 26, 2025 03:48 PM


தமிழகத்தில் அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கப்படும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


இந்த உத்தரவு, மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நீதியை உறுதி செய்வதுடன்  அவர்களின் திறமைகளை அரசு பணிகளில் மேலும் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீடு, உடலில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு பொருந்தும். அரசு அடையாளம் காணப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு மட்டுமே இந்த 4% இட ஒதுக்கீடு பொருந்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின்படி, இந்த ஒதுக்கீடு அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பதவி உயர்வுகளுக்கு செயல்படுத்தப்படும். இந்த முறையை முறையாக அமல்படுத்துவதற்கு அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம், நடைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம், மற்றும் ஆட்டிஸம் உட்பட   பிற மாற்றுத்திறனாளிகளுக்கு   1 சதவீதம் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வகைப்பாடு, பல்வேறு மாற்றுத்திறன் வகைகளை உள்ளடக்கி, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.