பொதுவாக கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி போன்ற காய்களை சாப்பிடலாம் .இதை தவிர ஒரு அருமையான குளிர்ச்சி தரும் ஒரு பானம் எப்படி தயாரிக்கலாம் என்று கூறுகிறோம்
1.முதலில் கம்பை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து 45 நிமிடங்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்.
2.பிறகு காய்ந்த கம்பை எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நல்ல கெட்டியாக , கூழாக அரைக்க வேண்டும்.
3.இதனை ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரில் கெட்டியாக கலக்கி வைத்து கொள்ளுங்கள்.
4.சின்ன வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
5.பின்னர் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்கள்.
6.கொதித்த நீரில் கலக்கி வைத்த கூழை விட்டு கட்டியாகாமல் கிளறி கொள்ளுங்கள்.
7.10 நிமிடம் கொதிக்க விட்டு தேவையான உப்பு போட்டு கலக்கவும்.
8.பரிமாறும் பொது மோரினை விட்டு கலக்கி நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பருகலாம்.இப்படி குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.