கனமழை... குற்றாலம் அருவிகளில் 4வது நாளாக குளிக்க தடை!
Dinamaalai June 27, 2025 02:48 PM

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தொடர்ந்து 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தற்போது இந்த தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுவந்த நிலையில் அருவிகளுக்கு தற்போது நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.