சென்னையில் பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலுமாக மாறுகிறது. சென்னை முழுக்க வரும் ஜூன் 30ம் தேதி, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 5 பணிமனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 பணிமனைகள் முற்றிலுமாக மின்சார பேருந்து இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை வியாசா்பாடி பணிமனையிலிருந்து 120 மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பராமரிப்புக் கூடம், அலுவலக நிா்வாக கட்டடம், பணியாளா் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்படுகின்றன.
அங்கு மேலும் புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்களை நிறுவுதல் போன்ற கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 120 மின்சார பேருந்துகளின் சேவையை ஜூன் 30ம்தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள், சென்னை முழுவதும் மொத்தமாக 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது