“நீங்க பணம் கொடுத்தா வாங்கி தருவேன்…” ரூ.20 லட்சத்தை அமுக்கிய இருவர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!
SeithiSolai Tamil June 27, 2025 05:48 PM

மதுரை மாவட்டம் மேலூர் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ், வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு(30). இவரிடம் அடைக்கலராஜ் தனக்கும், தன்னுடைய மனைவி மற்றும் உறவினருக்கும் சேர்த்து அரசு வேலை வாங்கி தருமாறு ரூ. 20,33,500 பணத்தை கொடுத்துள்ளார்.

பின்பு பணத்தைப் பெற்றுக் கொண்ட குமரகுரு அடைக்கலராஜிடம் போலி நியமன ஆணை மற்றும் அடையாள அட்டைகளை கொடுத்துள்ளார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அடைக்கலராஜ் குமரகுருவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் பணத்தை திருப்பி தர முடியாது என கூறி அடைக்கலராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அடைக்கலராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குமரகுருவிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் குமரகுரு மற்றும் அவருடன் சேர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்க்கும் முன்னமலை(45) என்ற நபரும் சேர்ந்து அடைக்கலராஜிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

எனவே இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த போலி பணி நியமன ஆணை மற்றும் போலி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.