தொடரும் துயரம்….! பூரி ஜெகந்நாதர் கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்….!!
SeithiSolai Tamil June 29, 2025 10:48 PM

ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கடந்த 27-ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக 9 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் ரத யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் 625 பேருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.

இன்று குந்திச்சா கோவில் அருகே அதிகாலை 4.30 மணிக்கு வழிபாட்டுக்காக எழுந்தருளிய பாலபத்திரர், ஜெகநாத், தேவி சுபத்ரா ஆகிய மூலவர்களை பார்ப்பதற்காக பக்தர்கள் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி மோகந்தி, பிரபாத்தி தாஸ், பாசாந்தி சாஹோ ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர். பெங்களூர் ஆர்சிபி அணி கோப்பையை வென்ற வெற்றி கொண்டாட்டத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இப்படி கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் உயிரிழக்கும் துயரம் தொடர்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.