கணவர் இறந்ததை அறியாமல் எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!
Dinamaalai July 08, 2025 01:48 AM


 

கோவை மாவட்டத்தில்  தெற்கு உக்கடம் அருகே  கோட்டை புதூர் காந்தி நகரில் வசித்து வருபவர் 48 வயது அப்துல் ஷா .  இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். அப்துல் ஷா, வேலைக்குச் செல்லாமல் போதையில் வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.  அவரது மனைவி உடல்நிலை சரியில்லாதவர். இதனால் அவரது மகன் ஷாருக்கான் மற்றும் மகள் ஆகியோர் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்தனர்.  அப்துல் ஷாவும் அவரது மனைவியும் காந்தி நகர் வீட்டில் வசித்து வந்த நிலையில்   அவ்வப் போது பெற்றோரை இருவரும் வந்து பார்த்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.  கடந்த 5 நாள்களுக்கு முன்பு அப்துல் ஷா பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் அவரது மகன் ஷாருக்கானுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு  வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக செல்போனில் தகவல் தெரிவித்து உள்ளனர்.

உடனே ஷாருக்கான் பெற்றோர் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்த போது  வீட்டில் உள்ள படுக்கை அறையில் அப்துல் ஷா படுத்த நிலையில் கிடந்தார். உடனே தாயிடம் ஷாருக்கான் ஏதோ ? நாற்றம் வருகிறதே என்ன நாற்றம் என்று கேட்டு உள்ளார். அப்போது அவரது தாயார் எலி எங்காவது செத்து கிடக்கும். அதில் இருந்து தான் துர்நாற்றம் வருகிறது எனக் கூறிவிட்டார்.  
எனவே தந்தை அப்துல் ஷா தூங்குவதாக நினைத்து ஷாருக்கானும் அங்கிருந்து சென்று விட்டார். இந்நிலையில் மறுநாள் துர்நாற்றம் அதிக அளவில் வீசி உள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அதைத் தாங்க முடியாமல் அவதியடைந்தனர்.  
மீண்டும் ஷாருக்கானுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். வீட்டிற்குள் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. யாரும் இருக்க முடியவில்லை எனக் கூறினர்.  ஷாருக்கான் மீண்டும் வீட்டிற்கு வந்த போது தான்  படுக்கை அறையில் இருந்து தந்தை அப்துல் ஷா எழுந்து வராததும் அங்கு இருந்து தான் துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது. அருகில் சென்று பார்த்த போது அப்துல் ஷா படுக்கையில் உயிரிழந்ததை கண்டார்.  அவர் இறந்து 5 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பதால் துர்நாற்றம் கடுமையாக வீசி உள்ளது.

அவர் இறந்து கிடந்தது தெரியாமல் அவரது மனைவி வீட்டிலேயே 5 நாள்களுக்கு மேலாக வசித்து வந்துள்ளார். காவல் நிலையத்துக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில்  இறந்து கிடந்த அப்துல் ஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.   கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் ஒரே வீட்டில் மனைவி வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.