கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் முத்துக்குமரன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக உள்ளார் இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருமயிலாடி கிராமத்தில் வசிக்கும் வினோதினிக்கும்(30) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவரது வீட்டில் இவர்களது வீட்டில் முத்துக்குமாரனின் தங்கை புவனேஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்ட மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இதற்கிடையில் வினோதினியும் தன்னுடைய உடலுக்காக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று வினோதினி தனது வீட்டில் தன்னுடைய மாத்திரையை சாப்பிடுவதற்கு பதிலாக புவனேஸ்வரியின் மாத்திரையை சாப்பிட்டுள்ளார். இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இருந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.