ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டத்தில், சூனியம் வைத்ததாக சந்தேகப்பட்டு 35 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்டு, உடல் அருகே உள்ள அணையில் வீசப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு, மலசபதர் கிராமத்தில் ஒரு இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த மரணத்திற்கு, அந்த இளைஞர் சூனியம் வைத்ததுதான் காரணம் என கிராம மக்கள் சந்தேகப்பட்டனர். இதனால், அந்த இளைஞரை ஊரைவிட்டு வெளியேறும்படி மிரட்டியுள்ளனர்.
கிராம மக்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து, அந்த இளைஞர் தனது குடும்பத்துடன் மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று தனது கால்நடைகள் மற்றும் ஆடுகளை மேய்க்க சென்றபோது, கிராம மக்கள் அவரை கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட அந்த இளைஞர், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதோடு, அவரது பிறப்புறுப்புகளும் சிதைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர், அவரது உடலை அருகில் உள்ள அணையில் வீசியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அணையில் இருந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 14 கிராம மக்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரு அப்பாவி இளைஞர் சூனியம் வைத்ததாக சந்தேகப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சிதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva