தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்…!
Top Tamil News September 21, 2025 03:48 AM

தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. காலை முதலே வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் மேகக் கூட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கடல் காற்றும் நிலப்பகுதியை நோக்கி வீசி வருகிறது. இதனால் சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்யும். இரவு நேரத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் கடந்த இரு தினங்களாக இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்து வருகிறது.

ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய உள்மாவட்டங்களிலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களிலும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் இன்னொரு ரவுண்ட் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் மற்றொரு பதிவில் தெற்கு புறநகர் பகுதிகள், OMR, மறைமலை நகர், காட்டாங்கொளத்தூர், ECR ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ஏற்கனவே நூற்றாண்டுகள் மழை பெய்துள்ளது. மீண்டும் ஒருமுறை தமிழக மழைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறது என தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.