“விஜய்க்கு கூட்டம் கூடுகிறது, அதை மறுக்க முடியாது”- ஓபிஎஸ்
Top Tamil News September 24, 2025 11:48 PM

அண்ணாமலை என்டிஏ கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, தற்சமயம் தான் பதிலளிக்க விரும்பவில்லை என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “விஜய்க்கு கூட்டம் கூடுகிறது அதை மறுக்க முடியாது. ஆனால் அது வாக்காக மாறுமா என்பதை தேர்தலுக்குப் பிறகு வாக்குகள் எண்ணிக்கை பதிவான பிறகு தான் சொல்ல முடியும். அண்ணாமலை என்டிஏ கூட்டணிக்கு அழைப்பு விடுத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, தற்சமயம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை.பிரிந்து போனவர்கள் வருவதை வரவேற்கிறோம் என வைகை செல்வன் கூறுகிறார். ஆனால் அவர் இப்போது எந்த கட்சியில் இருக்கிறார் என்ன பொறுப்பில் இருக்கிறார். அவருக்கு அதிகாரம் உள்ளதா? தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் இருக்கு அதற்குள் பிரச்சாரத்துக்கு அவசரப்பட வேண்டாம். அதிமுக தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவர்களை எப்படி கட்சியில் சேர்க்க முடியும் என சி.வி.சண்முகம் கூறுகிறார். கூட்டணி சேர வேண்டும் என்று  சி.வி சண்முகம் வீட்டு வாசலில் யார் நின்றது. 

விஜய் பிரச்சாரத்திற்கு தேவையில்லாத கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. திமுகதான்  தான் எதிரி என விஜய் கூறுவதற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.