மத்தியப் பிரதேசத்தில் 04.09.2025 அன்று கோல்ட்ரிஃப் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன்போது தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு 01.10.2025 அன்று தகவல் வந்தது. தகவல் பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் துறை அதிகாரிகள் உடனடியாக அம்மருந்து நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொண்டு, சந்தேகமான மருந்தை ஆய்வுக்குட்படுத்தினர். இதில், மருந்தில் டைதிலீன் கிளைகால் (DEG) எனும் விஷத்தன்மையுள்ள வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின், அந்நிறுவனத்தின் அனைத்து மருந்துகளையும் விற்பனைக்கு தடையிட, உற்பத்தி நிறுத்தப்பட்டு உரிமைகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதேபோல், மருந்து விநியோகம் செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் குறித்து மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் விரிவான அறிக்கைகள் அனுப்பப்பட்டன.
மருந்து நிறுவன உரிமையாளர் திரு. ரங்கநாதன் (வயது 75) மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, 09-10-2025 அன்று சென்னை அசோக் நகர் பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீசன் பார்மசியூட்டிக்ஸ் நிறுவனத்தின் உரிமைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது, நிறுவனம் மூடப்பட்டது. மாநிலம் முழுவதும் மற்ற மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் விரிவான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?