Breaking: திடீர் திருப்பம்… கரூர் சம்பவம்…. தவெக நிர்வாகிகளுக்கு நிபந்தனையற்ற ஜாமின்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
SeithiSolai Tamil October 16, 2025 02:48 AM

கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், முக்கியத்துவம் வாய்ந்த மாநில செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்றைய விசாரணையில், மீண்டும் காவல் நீட்டிக்குமாறு போலீசார் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், கரூர் நீதிமன்ற நீதிபதி அந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, இருவருக்கும் நிபந்தனையற்ற ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இது தவெக வழக்கில் முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.