தீபாவளிக்கான எண்ணெய் பலகாரங்கள் செய்யறப்போ இதை மறக்காதீங்க... அதிக எண்ணெய் செலவாகாது.. செம டேஸ்ட்!
Dinamaalai October 20, 2025 05:48 PM

தீபாவளி பண்டிக்கைக்கு அடுப்பில் எண்ணெய் சட்டியை ஏற்றாமல் அது என்ன கொண்டாட்டமாக இருக்க முடியும்? அதே சமயம் செலவை யோசிப்பவர்கள், வெறும் குலோப் ஜாமுனுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். அப்படி இல்லாமல் அடுப்பில் எண்ணை சட்டியை ஏற்றி, எண்ணெய் பலகாரங்களைச் செய்யும் போது இந்த முக்கியமான விஷயத்தை  மறந்துடாதீங்க. இது ரொம்பவே சாதாரணமாக டிப்ஸ்கள் தான். ஆனால் டேஸ்ட் செமயா இருக்கும். கூடவே எண்ணெய்யும் அதிகமாக செலவாகாது.

தீபாவளி என்றாலே பலகாரம், புத்தாடை, பட்டாசுகள், கொண்டாட்டங்கள் தானே. இதில் புது துணி என்கிற கொண்டாட்டங்கள் எல்லாம் இப்போது சாதாரணமாகி விட்டது. நினைச்சா புது துணி எடுத்துக்கொள்கிற மாதிரியான மனநிலைக்கு வந்துவிட்டோம். அந்த காலத்துல வருஷத்துக்கு தீபாவளி, பொங்கல், பொறந்தநாளுன்னு 2,3 தடவைத் தான் புதுத்துணி எடுக்கிற பழக்கம் இருந்துச்சு. இப்போ பணத்தைத் துணிகளில் கொட்டி, வாங்கி குவிக்க தொடங்கி விட்டோம்.

பட்டாசுகளை வெடிப்பதில் க்ரீன் தீபாவளி விழிப்புணர்வு அதிகரித்து வருது. சுற்றுச்சூழல் சீர்கேடு, வைரஸ் பரவல், நேர மாற்றம் என பலவகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பட்டாசுகள் நமநமத்துப் போய்விட்டது. அன்று முதல் மவுசு குறையாமல் இருப்பது தீபாவளியன்றைக்கான வீட்டு பலகாரங்களுக்கு மட்டும் தான்.

பலரும் கடைகளில் வாங்கி உடல் நலக்குறைபாடு ஏற்படுவதில் இருந்து தடுக்க வீடுகளிலேயே செய்ய முயற்சிக்கின்றனர். வீட்டில் பலகாரங்கள் தயாரிப்பதில் பெரிய சவால் சில கவனக்குறைவு தான். இதனை சரியாக செய்து விட்டால் அனைத்துமே சரியாக ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாடலாம். இதற்கு சில விஷயங்களில் மிகவும் கவனம் தேவை.

பலகாரம் செய்ய ஐ.ஆர்.20 பச்சரிசியை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் செய்யும் பலகாரங்கள் தான் சுவையாகவும் மென்மையாகவும் வரும். அதிரசம், முறுக்கு தயாரிப்பதற்கு அளவு முழு தானியங்களாக அளப்பது தான் சரியாக இருக்கும்.சீடை, பக்கோடா, மாவுருண்டைகளுக்கு அரைத்த மாவை அளவீடு செய்ய வேண்டும்.

மில்லில் மாவு அரைக்க கொடுக்கும்போது தனியாக அரை கிலோ அரிசியை கொடுத்து அரைத்து வாங்கிக் கொண்ட பிறகு பலகாரத்திற்கு தேவையான பொருள்களை அரைத்தால் கலப்படமில்லாத மாவு கிடைக்கும். பலகாரமும் சுவையாக இருக்கும்.மாவு அரைத்த அன்றைக்கே பலகாரம் செய்தால் சுவையும் மணமும் கூடும். அதிரசத்தை பொறுத்தவரை உடனே செய்து விட வேண்டும்.

எல்லா வகை மாவையுமே நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எண்ணெயில் பொரிக்கும்போது வெடிக்காமல் இருக்கும். முறுக்கு, ரிப்பன் பக்கோடாக்களுக்கு மாவை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து பிசைய வேண்டும் அப்போது தான் எண்ணெய் குடிக்காமல் வரும். பிசைந்த மாவு இருக்கும் பாத்திரத்தில் சிறிது சிறிதாக எடுத்து விட்டு மாவு பாத்திரத்தை மூடிவிட வேண்டும்.

அதிரசம், குலாப்ஜாமூன் வகைகளுக்கு மிதமான சூட்டில் எண்ணெய் இருந்தாலே போதுமானது. பலகாரம் செய்யும் போது டால்டா, செயற்கை நிறமூட்டிகள் , ஆப்பசோடா இவைகளை தவிர்க்க வேண்டும். அதிரசங்களை டப்பாவில் வைக்கும் போது அடியில் டிஷ்யூ பேப்பர்களை வைத்தால் உபரி எண்ணெயை டிஷ்யூ பேப்பர் இழுத்துக்கொள்ளும். அதிகபட்சமாக ஒரு வாரம், பத்து நாட்களுக்குள் செய்த பலகாரங்கள் தீரும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.